search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகலிங்க பூ"

    • நாகலிங்க பூவையே நாம் சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜிக்கலாம்.
    • மரத்தில் இன்று ஒரே பூவில் 2 மொட்டுக்கள் மலர்ந்துள்ளது.

    சேலம்:

    சிவ லிங்க பூஜைக்கு உதவக்கூடிய முக்கிய பொருட்களாக வில்வ இலை, தாமரைப்பூ, செவ்வரளிப் பூ வரிசையில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கிய இடம் வகிக்கிறது. நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம் இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும். பூவுலகின் மகத்தானது. நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது, நாம் பெற்ற புண்ணியம் தான். தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும். நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தால் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும். 3 கால பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை.

    நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும். நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது. நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான, உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம் . ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும். இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய, சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது.

    நாகலிங்க பூவை வழங்கிய 21 ரிஷிகளை 'மாத்ருகா ரிஷிகள்' என்று அழைக்கப்படுகிறார்கள். நாகலிங்க பூவையே நாம் சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜிக்கலாம். நாகலிங்க பூவை வழிபாட்டால் நீண்ட கால தீராத நோய் தீரும். மன வேதனை குறையும்.

    இத்தகைய அற்புத மலரான நாகலிங்க பூ சேலத்தில் மலர்ந்துள்ளது. சேலம் பெரம்மனூர் நாராயண பிள்ளை தெரு பகுதியில் ஒரு உள்ள வீட்டில் மிகவும் பழமையான நாகலிங்க மரம் உள்ளது. இந்த மரத்தில் இன்று ஒரே பூவில் 2 மொட்டுக்கள் மலர்ந்துள்ளது. சிவராத்திரி அன்று இந்த அதிசயப் பூ பூத்துள்ளதால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். 

    போச்சம்பள்ளி அருகே ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த நாகலிங்க பூ தற்போது பூக்க தொடங்கி உள்ளது.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள எலுமிச்சம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வீரராகவன். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நாகலிங்க செடியை நட்டு வைத்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த நாகலிங்க பூ தற்போது பூக்க தொடங்கி உள்ளது.

    இது கடவுளுக்கானதல்ல இதுவே கடவுள். பூவுக்குள்ளே இறங்கி வந்து குடியிருக்கிறான் இறைவன். அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலராக நாகலிங்கப் பூவை கூறுவர். பூவில் நாகமுமிருக்கிறது. உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன. உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு மினியேச்சர் கைலாயமே கைக்குள் இருப்பதுபோல் இருக்கும்.

    விசேஷத்திலும் விசேஷமாக மரத்தில் பூக்கும் பூவாக வேர்ப் பகுதிக்கு சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகளில் பூக்காமல் தனக்கென்று தான் பூப்பதற்கு என்று பிரத்யேகமாக ஒரு கிளையை உருவாக்கிக் கொண்டு பூக்கும் மலராக நாகலிங்கப்பூ உள்ளது. ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்குமாம். அமேசான் காட்டுப் பகுதிகளில் இந்த மரம் துர்தேவதைகளில் இருந்து காக்கும் மரமாகவும் ஆசிய கண்டத்தில் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

    மேலும் இந்த மரம் மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது. காற்றில் அதிகமான சல்பர் இருந்தால் இதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்துமாம். இந்த மரத்தின் இலைகளை அரைத்து தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். இதன் இலைகளை மென்று திண்பதால் பல்வலிக்கு மருந்தாகவும், பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ காய்ச்சலுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.
    ×